For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இம்ரானை அழைத்து செல்ல மும்பை போலீசார் சென்னை வருகை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னையில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட தாவூத் இப்ராகிமின் கும்பலைச் சேர்ந்த இம்ரான் மெகந்தியைஅழைத்துச் செல்வதற்காக எழும்பூர் நீதிமன்றத்தில் மும்பை போலீஸார் இன்று (திங்கள்கிழமை) மனு தாக்கல்செய்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட இம்ரானை 5 நாட்கள் காவலில் வைக்க எழும்பூர் நீதிமன்றம் கடந்தசனிக்கிழமை உத்தரவிட்டது.

ஆனால் இன்று காலை இம்ரான் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான். அப்போது அவனை வரும்அக்டோபர் 6ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

ஆனால் தனக்கு சிறுநீரக நோய் இருப்பதால் தன்னைப் போலீஸ் காவலிலேயே வைக்க வேண்டும் என்று இம்ரான்கோரிக்கை விடுத்தான். ஆனால் அதை ஏற்றுக் கொள்ள நீதிபதி மறுத்துவிட்டார்.

இதையடுத்து அவன் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டான்.

இந்நிலையில் இம்ரானைக் கைது செய்து அழைத்துச் செல்வதற்காக வாரண்ட்டுடன் மும்பை போலீஸார் சென்னைவந்து சேர்ந்தனர்.

இன்று காலை சென்னை மாநகரப் போலீஸ் கமிஷனர் விஜயகுமாரை மும்பை போலீசார் சந்தித்துப் பேசினர்.பின்னர் எழும்பூர் நீதிமன்றம் சென்ற மும்பை போலீசார், இம்ரானைக் கைது செய்வதற்கான வாரண்ட்டைசமர்ப்பித்து, அவனை அழைத்துச் செல்வதற்காக ஒரு மனுவையும் தாக்கல் செய்தனர்.

பின்னர் நீதிமன்றத்தின் அனுமதி கிடைத்தவுடன் இம்ரானை மும்பை போலீசார் அழைத்துச் செல்வார்கள்.

இம்ரான் மீது 5 கொலை வழக்குகள் உள்பட 12 வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X