50 குழந்தைகளைத் தத்து எடுக்கிறார் ஏ.சி. சண்முகம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம், தனது 50வது பிறந்த நாளையொட்டி ஏழைக் குழந்தைகளைத் தத்துஎடுக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

கடந்த சட்டசபைத் தேர்தலின்போது ஆரம்பிக்கப்பட்ட ஜாதிக் கட்சியான புதிய நீதிக் கட்சி இடையில் முடங்கிப்போய் விட்டது. அதிமுகவில் சேர எடுக்கப்பட்ட முயற்சிகளும் பலனின்றிப் போனது. இதனால் மீண்டும் கட்சியைபுது வேகத்துடன் நடத்த சண்முகம் முடிவு செய்துள்ளார்.

அவரது 50வது பிறந்த நாள் இன்று (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. சண்முகத்தின் கல்லூரியான எம்.ஜி.ஆர்.பொறியியல் கல்லூரியில் இதற்கான விழா நடக்கிறது.

இதையொட்டி ஏழைக் குழந்தைகளைத் தத்தெடுக்கப் போவதாக சண்முகம் அறிவித்துள்ளார்.

ஏற்கனவே சண்முகம் 40 குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்து வருவதாகவும், மீண்டும் சில குழந்தைகளைதத்தெடுக்கப் போவதாகவும் கட்சியின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கு உணவு, உடை, கல்வி வசதி போன்றவவை இலவசமாகவே அளிக்கப்படும். வேலைவாய்ப்பு மற்றும்கல்யாணமும் ஏற்பாடு செய்து தரப்படும். இந்தக் குழந்தைகள் சண்முகத்தின் குழந்தைகளாகவே வளர்க்கப்படுவர்என்று கட்சியின் செய்திக்குறிப்பு மேலும் தெரிவித்தது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+