கீரிப்பட்டி, பாப்பாபட்டியில் வேட்பாளர்கள் வாபஸ்: தேர்தல் இல்லை

Subscribe to Oneindia Tamil

உசிலம்பட்டி:

மதுரை மாவட்டம் கீரிப்பட்டி மற்றும் பாப்பாபட்டி பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிட மனுத் தாக்கல் செய்த 4வேட்பாளர்களும் தங்கள் மனுக்களை வாபஸ் பெற்றுக் கொண்டதைத் தொடர்ந்து வரும் அக்டோபர் 7ம் தேதிஅங்கு தேர்தல் நடைபெறாது.

கீரிப்பட்டியில் மாயிக்காளை மற்றும் கட்டராமன் என்ற சகோதரர்கள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.

ஆனால் இவர்கள் இருவருமே சமீபத்தில் தங்களுடைய வேட்புமனுக்களை வாபஸ் பெற்றுக் கொண்டனர்.

இந்நிலையில் பாப்பாபட்டியில் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருந்த இரண்டு பேரும் கூட தங்களுடையமனுக்களை வாபஸ் பெற்றுக் கொண்டனர்.

சடையன் மற்றும் சின்னன் ஆகிய இரு சகோதரர்களும் தான் பாப்பாபட்டியில் வேட்பு மனுக்களைத் தாக்கல்செய்திருந்தனர். நேற்று இவர்கள் இருவருமே தங்கள் மனுக்களை வாபஸ் பெற்றுக் கொண்டனர்.

இதையடுத்து பாப்பாபட்டி மற்றும் கீரிப்பட்டி ஆகிய இரண்டு தொகுதிகளிலுமே வரும் அக்டோபர் 7ம் தேதிதேர்தல் நடைபெறாது. இதே மாவட்டத்தில் உள்ள நாட்டார்மங்கலத்தில் யாருமே வேட்பு மனுத் தாக்கல்செய்யவில்லை என்பதால் அங்கும் தேர்தல் நடைபெறாது என்பது குறிப்பிடத்தக்கது.

தலித்துகளுக்காக ஒதுக்கப்பட்ட இந்த மூன்று தொகுதிகளிலுமே அவர்களை வேட்பு மனுத் தாக்கல்செய்யவிடாமலும் போட்டியிட விடாமலும் மேல் ஜாதியினர் தொடர்ந்து தடுத்து வருகின்றனர்.

நாட்டார்மங்கலத்தில் தொடர்ந்து 8வது முறையாக யாரும் மனுத் தாக்கல் செய்ய முன் வராததால் அங்கு பலஆண்டுகளாகத் தேர்தல் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கீரிப்பட்டி மற்றும் பாப்பாபட்டியிலும் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற இடைத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டபஞ்சாயத்துத் தலைவர்கள் ஒருசில நாட்களிலேயே தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டனர் என்பதும்குறிப்பிடத்தக்கது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+