வீரப்பனைப் பிடிக்க ஒத்துழைக்கவில்லை: கிருஷ்ணா மீது ஜெ. புகார்
சென்னை:
சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிப்பதற்குத் கர்நாடக அரசு துளிக் கூட ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றுதமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று குற்றம் சாட்டினார்.
இது தொடர்பாக இன்று சென்னையில் நிருபர்கள் கூட்டத்தில் ஜெயலலிதா பேசுகையில்,
சமீபத்தில் டெல்லியில் கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவும் நானும் இது தொடர்பாகப் பேசினோம்.
ஆனால் டெல்லியிலிருந்து திரும்பி வந்து இவ்வளவு நாட்களாகியும் இது தொடர்பாக எந்தவிதமான தகவலையும்தமிழக அரசுக்கு கர்நாடக அரசு தெரிவிக்கவே இல்லை.
வீரப்பனைப் பிடிப்பதற்காக நாங்கள் எல்லா விதத்திலும் கர்நாடக அரசுக்கு ஒத்துழைப்பு தர தயாராகவேஉள்ளோம். ஆனால் இவ்விஷயத்தில் கர்நாடக அரசு தமிழகத்தை சிறிதும் மதிக்கவில்லை.
வீரப்பன் இன்னும் கர்நாடக காட்டுப் பகுதிகளில் தான் சுற்றி வருகிறான். அங்கிருந்து தப்பி தமிழகக் காட்டுப்பகுதிக்குள் அவன் வந்தால் நிச்சயம் பிடிபடுவான். அந்த அளவிற்கு கர்நாடக எல்லைப் பகுதிகள் முழுவதிலும்தமிழக அதிரடிப்படையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
காவிரி விவகாரம்:
காவிரி பிரச்சனையில் உச்ச நீதிமன்றத்தைத் தான் தமிழக அரசு பெரிதும் நம்பிக் கொண்டிருக்கிறது.
கர்நாடக அரசு மீது நாங்கள் தொடர்ந்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்னும் உச்ச நீதிமன்றத்தில்நிலுவையில் இருப்பதால், காவிரி கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்வது நீதிமன்றத்தை அவமதிப்பதுபோன்றதாகும் என்று சட்ட வல்லுனர்கள் தெரிவித்தனர்.
எனவே தான் சமீபத்தில் பெங்களூரில் நடைபெற்ற கண்காணிப்புக் குழுக் கூட்டத்தைப் புறக்கணித்தோம். மேட்டூர்அணையையும் அவர்கள் வந்து பார்ப்பது சரியில்லை என்பதையும் தெரியப்படுத்தினோம்.
நாட்டிலுள்ள அனைத்து நதிகளையும் தேசியமயமாக்கி கங்கை, காவிரி நதிகளை இணைத்தால் மட்டுமே காவிரிப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படும். எல்லாம் மத்திய அரசின் கைகளில் தான் உள்ளது என்றார் ஜெயலலிதா.
முன்னதாக, காவிரி விவகாரம் தொடர்பாக பெங்களூரில் இன்று நிருபர்களிடம் பேசிய கிருஷ்ணா, மேட்டூர்அணையை இன்னும் பார்வையிடாத நிலையில் காவிரி கண்காணிப்புக் குழுவின் பணி இன்னும் முடியவில்லைஎன்று கூறினார்.
-->












Click it and Unblock the Notifications