கொலை நகராகிறது சேலம்
சேலம்:
சேலம் மாவட்டம் மன்னார்பாளையம் என்ற இடத்தில் அந்த ஊரின் பஞ்சாயத்துத் தலைவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
சில வாரங்களுக்கு முன்பு தான் மாவட்ட காங்கிரஸ் தலைவர் தாளமுத்து நடராஜன் சுட்டுக் கொல்லப்பட்டார்.அவரது வீட்டில் இருந்து பல லட்சம் மதிப்புள்ள நகைககள் கொள்ளையடிக்கப்பட்டன.
இந் நிலையில் மன்னார்பாளையம் பஞ்சாயத்துத் தலைவர் சக்திவேல் சுட்டும் வெட்டியும் கொல்லப்பட்டார்.
இவர் தனது தோப்பில் விளைந்த தேங்காய்களை கண்ணன் குறிச்சி சந்தையில் விற்பதற்காக ஜீப்பில் இன்றுஅதிகாலை சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஒரு கும்பல் அவரை வழிமறித்து துப்பாக்கிளால் சரமாரியாக சுட்டது. பின்னர் அரிவாள்களால்சக்திவேலை கண்டந்துண்டமாக வெட்டினர். இதில் அந்த இடத்திலேயே சக்திவேல் இறந்தார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் முன் விரோதம் காரணமாகவேசக்திவேல் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீஸார் தெரிவித்தனர்.
சக்திவேல் கொலைக்குக் காரணமாக குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன் மன்னார்பாளையம் மக்கள் போராட்டம் நடத்தினர்.
-->












Click it and Unblock the Notifications