அம்மாவை திட்டுமாறு தூண்டி விடுகிறார் சோனியா: பொன்னையன்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முதல்வர் ஜெயலலிதாவை விமர்சிக்குமாறு காங்கிரஸாரை அக்கட்சித் தலைவர் சோனியா காந்தி தூண்டிவிட்டுள்ளதாக நிதியமைச்சர் பொன்னையன் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக பொன்னையன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியால் ஆட்சிக்கு வர முடியாது என்ற உண்மையை சோனியா காந்தி தெளிவாகப்புரிந்து கொண்டுள்ளார். எனவே விரக்திக்குள்ளாகியுள்ள அவர், முதல்வர் ஜெயலலிதாவை விமர்சிக்குமாறு தனதுகட்சித் தலைவர்களைத் தூண்டி விட்டு வருகிறார்.

அதன் காரணமாகவே, காவிரிப் பிரச்சினையில் முதல்வர் ஜெயலலிதாவை, காங்கிரஸ் பொதுச் செயலாளர் அனில்சாஸ்திரி விமர்சித்துள்ளார்.

காவிரிப் பிரச்சினையில் முதல்வர் ஜெயலலிதா சட்டப்படியே செயல்பட்டு வருகிறார்.

ஆனால் காவிரி ஆணைய உத்தரவு, சுப்ரீம் கோர்ட் உத்தரவு, பிரதமரின் உத்தரவு என எதையுமே சட்டைசெய்யாமல், அவமதித்து நடந்து வரும் கர்நாடகத்துடன், முதல்வர் ஜெயலலிதா எப்படி காவிரிப் பிரச்சினைசம்பந்தமாக பேச முடியும்? என்று கேட்டுள்ளார் பொன்னையன்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+