மீண்டும் வருகிறது கூடல் நகர் எக்ஸ்பிரஸ்
மதுரை:
மதுரைக்கும், சென்னைக்கும் இடையிலான கூடல் எக்ஸ்பிரஸ் ரயில் வரும் அக்டோபர் 2ம் தேதி முதல் மீண்டும்இயக்கப்படவுள்ளது. மத்திய ரயில்வே இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தியின் முயற்சியால் இந்த ரயில் மீண்டும்கிடைத்துள்ளது.
இவர் படிக்காதவர் என்பதால் இவரை அமைச்சராக்கியபோது பல விதத்திலும் சந்தேகங்கள் எழுந்தன. இவரால்துறையை நிர்வகிக்க முடியுமா என்ற சந்தேகம் ஏற்பட்டது.
ஆனால், மெத்தப் படித்து மத்திய அமைச்சர்களாக உள்ள நம் ஊரின் மற்ற 9 அமைச்சர்களைவிட மூர்த்தி கடந்த சிலமாதங்களிலேயே தமிழகத்துக்கு பல திட்டங்களைக் கொண்டு வந்துவிட்டதை பாராட்டியே ஆக வேண்டும்.
புதிய பல ரயில்களை தமிழகத்தில் அறிமுகம் செய்து வருகிறார். மூர்த்தி அமைச்சரான பின்னர் தமிழகத்துக்கு 6புதிய ரயில்கள் கிடைத்துவிட்டன.
ரயில்களில் தொட்டில்களை அமைத்து குழந்தைகளுடன் பயணம் செய்யும் தாயின் பிரச்சனையைத் தீர்த்துள்ளார்.இது மிகச் சிறிய ஒரு திட்டம் தான். ஆனால், இதன் பயன் எவ்வளவு என்பது கைக்குழந்தையுடன் செல்லும்குடும்பத்தினருக்கு மட்டும்தான் புரியும்.
அது போல முன்பு ஓடிக் கொண்டிருந்த கூடல் எக்ஸ்பிரஸ் ரயிலை சில வட இந்திய அதிகாரிகள் திடீரென நிறுத்திவைத்திருந்தனர். இந்த ரயிலை இயக்கக் கோரி மதுரையில் போராட்டம் கூட நடந்தது. ஆனால், அதை ரயில்வேநிர்வாகம் காதில் வாங்காமல் இருந்து வந்தது.
இந் நிலையில் இரு நாட்களுக்கு முன் மதுரை சென்ற மூர்த்தியிடம் பயணிகள் நேரில் சந்தித்து இந்தப் பிரச்சனையைஎழுப்ப அங்கிருந்தபடியே மீண்டும் ரயிலை இயக்க உத்தரவிட்டார் மூர்த்தி.
இதையடுத்து அக்டோபர் 2ம் தேதி முதல் இந்த ரயில் மீண்டும் இயக்கப்பட உள்ளது. சென்னையிலிருந்து காலை 8மணிக்கு இந்த ரயில்கிளம்பும். மாலை 4 மணிக்கு மதுரையை சென்றடையும். மறு மார்க்கத்தில் பிற்பகல் 12மணிக்கு மதுரையிலிருந்து கிளம்பும் ரயில், இரவு 8 மணிக்கு சென்னை வந்தடையும்.
தாம்பரம், செங்கல்பட்டு, மதுராந்தகம், விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை கூடல்நகர் ஆகிய இடங்களில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் தமிழையே எழுத்துக் கூட்டி தட்டுத்தடுமாறித்தான் படிக்கிறார் மூர்த்தி. ஆங்கிலம் சுத்தமாகதெரியவில்லை. நிருபர்கள் சந்திப்பில் கூட கேள்விகளுக்கு பதில் சொல்லும்போது தடுமாறி தடுமாறியே பேசுகிறார்.
இருந்தாலும் அவரது நிர்வாகத் திறனையும் தமிழகத்துக்கு உரிய ரயில் திட்டங்களைக் கிடைக்கச் செய்யவும் அவர்காட்டும் ஆர்வத்தை மெச்சியே ஆக வேண்டும்.
-->
-
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
ஆத்தாடி இம்புட்டு கோடியா? ‘பறிமுதல்’ பணத்தை மீட்பது எப்படி? உரிமை கோராத பணம் என்ன ஆகும்? -
அண்ணாமலை போட்டி இல்லை! கோவை வடக்கில் வானதி, மயிலாப்பூரில் தமிழிசை.. பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு -
27 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்.. மேலூர் தொகுதிக்கு மட்டும் நிறுத்திவைப்பு! -
RTE admissions: தனியார் பள்ளிகளில் இலவச கல்வி! ஆர்டிஇ சேர்க்கை எப்போது? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? -
Spot the difference: இந்த இரு படங்களுக்கிடையே 3 வித்தியாசங்களை கண்டுபிடியுங்கள்! சவாலுக்கு ரெடியா? -
ஏழை மாணவர்களுக்கு சூப்பர் சான்ஸ்.. தனியார் பள்ளிகளில் LKG முதல் இலவசம்.. ஹென்றி சொன்ன தேதியை பாருங்க -
இடி, மின்னலுடன் கனமழை.. ஆரஞ்சு அலர்ட் கொடுத்த வானிலை மையம்! மக்களே உஷார் -
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்! -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம்












Click it and Unblock the Notifications