வைகை ஆற்றில் மூழ்கி 3 சிறுமிகள் பலி
மதுரை:
வைகை ஆற்றில் உள்ள குட்டையில் மூழ்கி 3 சிறுமிகள் உயிழந்தனர்.
மதுரை வண்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் அபிநயா. இவருக்கு 10 வயது ஆகிறது.
இவரும் அதே பகுதியைச் சேர்ந்த பாண்டி என்பவரது மகள்களான சுதா மற்றும் நாகு ஆகியோரும் நேற்றுவிளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது வீட்டுக்குப் பின்புறம் உள்ள வைகை ஆற்றுக்குள் இறங்கி விளையாடத் தொடங்கினர். ஆற்றின் நடுவேஉள்ள குட்டைக்குள் இறங்கி விளையாடியபோது, எதிர்பாராதவிமாக அவர்கள் மூவரும் குட்டைக்குள் மூழ்கிவிட்டனர்.
விளையாடச் சென்ற மகள்களைக் காணாமல் தவித்த ராஜேந்திரன் மற்றும் பாண்டி ஆகியோர் பல பகுதிகளிலும்தேடிப் பார்த்தனர்.
இந்நிலையில் மூன்று சிறுமிகளின் உடல்களும் சிறிது நேரத்தில் அந்தக் குட்டையில் மிதக்க ஆரம்பித்தன.இதையடுத்து அவர்களது உடல்கள் மீட்கப்பட்டன.
இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications