உச்ச நீதிமன்றம் குட்டினால் தான் புத்தி வருமா?: அரசுக்கு சிதம்பரம் கேள்வி
சென்னை:
காவிரி விஷயத்தில் ஒவ்வொரு முறையும் உச்ச நீதிமன்றம் கண்டித்த பிறகு தான் தமிழக அரசு தவறுகளை ஏற்றுக்கொள்கிறது என்று காங்கிரஸ் ஜனநாயகப் பேரவையின் தலைவரான ப. சிதம்பரம் குற்றம் சாட்டினார்.
தேசப் பிதா காந்தியடிகளின் 133வது பிறந்த நாள் விழாவையொட்டி, காங்கிரஸ் ஜனநாயகப் பேரவைஅலுவலகத்தில் உள்ள அவருடைய உருவப் படத்திற்கு சிதம்பரம் மாலை அணிவித்தார். பின்னர் நிருபர்களிடம்பேசுகையில்,
தமிழக அரசு தொடர்ந்து தவறான அணுகுமுறையையே காவிரி விஷயத்தில் கையாண்டு வருகிறது.
உச்ச நீதிமன்றம் வந்து குட்டிய பிறகு தான் காவிரிக் கண்காணிப்பு குழுவினர் மேட்டூர் அணையைப் பார்வையிடதமிழக அரசு அனுமதித்துள்ளது.
இதை முதலிலேயே செய்திருந்தால் அநாவசியமாக 2-3 வார கால தாமதத்தைத் தவிர்த்திருக்கலாமே?
காவிரி விவகாரத்தில் காவிரி ஆணையத்துடனும் கண்காணிப்புக் குழுவிடமும் ஒத்துழைப்பது தமிழக அரசுக்குமிகவும் அவசியம். அதை விட்டுவிட்டு இவ்வாறு பிடிவாதமாக இருப்பதால் தமிழக விவசாயிகள் தான்பாதிக்கப்படுவார்கள்.
உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தீர்ப்பு வந்த பிறகு தமிழக அரசு மீண்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டிகாவிரி குறித்து விவாதிக்க வேண்டும் என்றார் சிதம்பரம்.












Click it and Unblock the Notifications