Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மதுரை: பிளாட்பார கடையில் இட்லி சாப்பிட்ட ஒருவர் பலி- 48 பேர் மயக்கம்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

மதுரையில் சாலையோரக் கடையில் பழைய மாவினால் தயாரிக்கப்பட்ட இட்லியைச் சாப்பிட்ட ஒருவர்உயிரிழந்தார். 48 பேர் வாந்தி, மயக்கத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இட்லி என்றால் உடனடியாக நினைவுக்கு வருவது மதுரை தான். சாலையோரத்தில் காணப்படும் இட்லிக்கடைகளில் எப்போதுமே கூட்டம் அலை மோதிக் கொண்டிருக்கும். இதுபோன்ற இட்லிக் கடைகள் நிறைந்துள்ளகீரைத்துரை பகுதியில் இருளாயி என்பவர் நீண்ட காலமாக இட்லிக் கடை வைத்துள்ளார்.

இந்தக் கடையில் நேற்று காலை ஏராளமானோர் இட்லி வாங்கிச் சாப்பிட்டனர். அவர்களில் 30 வயதான ஜான்என்ற வெட்டியானுக்கு இட்லி சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

உடனடியாக அவரை அங்கிருந்தவர்கள் அரசு ராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால்வழியிலேயே அவர் இறந்தார்.

இதேபோல இக்கடையில் இட்லி சாப்பிட்ட மேலும் 48 பேர் மயக்கம் ஏற்பட்டு வாந்தி எடுத்தனர். அவர்களும்அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இவர்களில் 16 ஆண்கள், 15 பெண்கள், 17 குழந்தைகள்அடங்குவர். அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பழைய மாவை வைத்து இருளாயி இட்லி ஊற்றியதாகவும், அதனால் அது விஷமாகி இருக்கலாம் என்றும்கருதப்படுகிறது. இதையடுத்து இருளாயி கைது செய்யப்பட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+