"கூடல் நகர் எக்ஸ்பிரஸ்" ஓடத் தொடங்கியது
சென்னை:
சென்னையிலிருந்து, மதுரைக்கு இயக்கப்படும் கூடல் நகர் அதி விரைவு ரயில் இன்று காலை துவக்கிவைக்கப்பட்டது.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மத்திய ரயில்வே இணை அமைச்சர் ஏ.கே. மூர்த்தி கொடியசைத்து இந்தரயிலைத் துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில்,
கன்னியாகுமரியிலிருந்து சென்னை (எழும்பூர்) வழியாக டெல்லி செல்லும் ரயில் ஒன்று விரைவில்அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
மக்கள் தரும் ஆதரவைப் பொறுத்து இந்தக் கூடல் எக்ஸ்பிரஸ் ரயில் விரைவில் ஜனசதாப்தி எக்ஸ்பிரசாகமாற்றப்படும்.
பஸ் கட்டணத்தை விட இந்த ரயிலின் கட்டணங்கள் மிக மிகக் குறைவு என்றார் மூர்த்தி.
மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் விஸ்வநாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். எழும்பூர்தொகுதி எம்.எல்.ஏ. பரிதி இளம் வழுதி, சென்னை துணை மேயர் கராத்தே தியாகராஜன் ஆகியோரும்இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
சென்னையிலிருந்து தினசரி காலை 8.10 மணிக்கு இந்த ரயில் மதுரை புறப்பட்டுச் செல்லும். மறு மார்க்கத்தில்மதுரையிலிருந்து பிற்பகல் 12 மணிக்கு சென்னைக்கு கூடல் எக்ஸ்பிரஸ் கிளம்பும்.
அறிவிக்கப்பட்ட நிலையங்கள் தவிர கூடுதலாக மேல் மருவத்தூர் மற்றும் ஸ்ரீரங்கம் ஆகிய நிலையங்களிலும் கூடல்எக்ஸ்பிரஸ் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications