நெல்லை: 2 வழிப்பறி கொள்ளையர்கள் கைது
நெல்லை:
திருநெல்வேலி அருகே பல இடங்களிலும் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டு வந்த 2 பேரைப் போலீசார் கைதுசெய்தனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வள்ளியூர், களக்காடு, திசையன் விளை ஆகிய இடங்களில் சமீப காலங்களில்அடிக்கடி வழிப்பறிக் கொள்ளைச் சம்பவங்களை நடந்து வந்தன.
மக்களை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி நகைகளைப் பிடுங்கிச் செல்வது, மோட்டார் சைக்கிளில் வந்துபெண்களின் கழுத்திலிருந்து தங்கச் செயின்களை அறுப்பது உள்ளிட்ட கொள்ளைச் சம்பவங்களில் ஒரு கும்பல்ஈடுபட்டு வந்தது.
மேலும் அப்பகுதிகளில் ஏராளமான பைக்குகளும் அடிக்கடி திருட்டு போயின.
இதையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து கொள்ளையர்களைத் தேடி வந்தனர்.
இந்நிலையில் இந்தக் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக சார்லஸ் மற்றும் நடராஜன் ஆகிய இருவரையும்போலீசார் சமீபத்தில் கைது செய்தனர்.
இந்த வழிப்பறிக் கொள்ளைச் சம்பவங்களில் எல்லாம் இந்த இருவரும் தான் ஈடுபட்டனர் என்பது தெரிய வந்தது.
அவர்களிடமிருந்து ஏராளமான நகைகளையும், பைக்குகளையும் கைப்பற்றிய போலீசார் அவர்களிடம் தொடர்ந்துதீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications