போனஸ் பேச்சு தோல்வி: அரசு ஊழியர்கள் 23ம் தேதி முதல் போராட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தீபாவளி மற்றும் பொங்கல் போனஸ் குறித்து தமிழக அரசுடன் இன்று நடந்த பேச்சுவார்த்தைதோல்வியடைந்ததைத் தொடர்ந்து வரும் 23ம் தேதி முதல் அரசு ஊழியர்கள் காலவரையற்ற போராட்டத்தில்ஈடுபடவுள்ளனர்.

அரசுத் தரப்பில் நிதித்துறை செயலாளர் நாராயணன் மற்றும் அரசு ஊழியர்கள் தரப்பில் நான்குதொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் இந்தப் பேச்சுவார்த்தையில கலந்து கொண்டனர்.

தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் நடந்த இந்தப் பேச்சுவார்த்தையின் போது தீபாவளி போனஸ், பொங்கல்முன்பணம், பண்டிகைக் கால முன்பணம் ஆகியவை குறித்து பேச்சுவார்த்தை நடந்தது.

ஆனால் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. இதையடுத்து வரும் 23ம்தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அரசு ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு அரசு ஊழியர்கள் கடுமையாகப் போராடியும் கூட அவர்களுடைய போனஸ் கோரிக்கையை அரசுகண்டுகொள்ளவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பஸ் ஊழியர்களும் கோரிக்கை:

இதற்கிடையே போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும் என்றுபோக்குவரத்துக் கழக ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் ஆர். செளந்தரராஜன் தமிழக அரசிடம்கோரிக்கை விடுத்துள்ளார்.

திருச்சியில் நடந்த தொழிலாளர் மாநாட்டில் அவர் பேசுகையில், போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு 20சதவீதத்திற்கு குறைவாக போனஸ் கொடுத்தால் வாங்க மாட்டோம் என்று கூறினார்.

கடந்த ஆண்டு போனஸ் பிரச்சினை காரணமாக போக்குவரத்துக் கழக ஊழியர்கள் மேற்கொண்ட போராட்டம்தீபாவளியைத் தாண்டியும் நீடித்ததும், தனியார் பஸ்கள், மினி பஸ்கள் ஆகியவற்றை வைத்து ஸ்டிரைக்கை அரசுமுறியடித்ததும் நினைவிருக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+