காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது: கர்நாடகம் பதில் மனு
டெல்லி:
காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது என கர்நாடகம் கூறியுள்ளது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்திலேயே கர்நாடகம் மனு தாக்கல் செய்ய உள்ளது.
கர்நாடக அரசு மீது தமிழக அரசு தொடர்ந்த அவமதிப்பு வழக்குக்கு இன்று கர்நாடக முதல்வர் கிருஷ்ணா,அமைச்சர் பாட்டீல் மற்றும் 3 அதிகாரிகள் இன்று தனித்தனியே பதில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
தங்களது மனுவில், காவிரி விவகாரத்தில் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான ஆணையம் கூடி விவாதித்துவருகிறது. கண்காணிப்புக் குழுவும் காவிரி அணைகளை பார்வையிட்டு வருகிறது. இந்த நேரத்தில் கர்நாடகத்துக்குஉச்ச நீதிமன்றம் என்ற உத்தரவும் பிறப்பிக்க முடியாது.
உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டபடி நாங்கள் தண்ணீரை தமிழகத்துக்குத் திறந்துவிட்டோம். ஆனால், பல்வேறுகாரணங்களால் அந்த நீர் மேட்டூர் போய்ச் சேர வாய்ப்பில்லாமல் போய்விட்டது(!!!!).
இப்போதுள்ள நிலையில் தமிழகத்துக்கு நீரைத் திறந்துவிட உத்தரவிட்டாலும் அதைச் செய்ய முடியாத நிலையில்நாங்கள் இருக்கிறோம். எங்கள் அணைகளில் நீர் இல்லை.
இவ்வாறு கிருஷ்ணா உள்ளிட்ட 5 பேரும் தங்கள் பதில் மனுவில் தெரிவிக்க உள்ளதாக கர்நாடக அரசுவட்டாரங்கள் தெரிவித்தன.
இந் நிலையில் தமிழகத்தில் மேட்டூர் மற்றம் காவிரி பாசனப் பகுதிகளை கடந்த 2 நாட்களாக பார்வையிட்ட மத்தியநீர்வளத்துறை செயலாளர் கோஸ்வாமி தலைமையிலான காவிரி கண்காணிப்புக் குழுவினர் இன்று தங்களதுஅறிக்கையை பிரதமரிடம் சமர்பிக்கின்றனர்.
நாளை இந்த அறிக்கை உச்ச நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
இதையடுத்து கர்நாடகம் மீது தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை உச்ச நீதிமன்றம்விசாரிக்க உள்ளது.












Click it and Unblock the Notifications