"மின் கட்டணத்தை உயர்த்தினால்...": அரசுக்கு இ. கம்யூ. எச்சரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மின் கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தினால் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று இந்தியகம்யூனிஸ்ட் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளரான ஆர். நல்லக்கண்ணுவெளியிட்டுள்ள அறிக்கையில்,
விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரத்தை விலக்கிக் கொள்ள தமிழக அரசு முடிவு செய்திருப்பதுகண்டிக்கத்தக்கது.
மேலும் தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்தவும் தமிழக மின் வாரியம் திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்தைக்கைவிட வேண்டும்.
அவ்வாறு கைவிடாவிட்டால் தமிழக அரசு கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்றுகூறியுள்ளார் நல்லக்கண்ணு.












Click it and Unblock the Notifications