"தகாத உறவு" அம்பலமானதால் 2 பெண்கள் தற்கொலை
ஈரோடு:
கோயம்புத்தூரில் உள்ள ஈசா யோகா மையத்திலிருந்து வெளியேற்றப்பட்ட ஓரினச் சேர்க்கை பழக்கம் கொண்ட 2இளம் பெண்கள் ஈரோடு மாவட்டம் பண்ணாரி காட்டுப் பகுதியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
சென்னையச் சேர்ந்த சுமதி மற்றும் ஈரோடு மாவட்டம் கள்ளிப்பட்டியைச் சேர்ந்த கீதா லட்சுமி ஆகிய இருவரும்கோயம்புத்தூரில் உள்ள ஈசா யோகா மையத்தில் யோகா பயிற்சி பெற்று வந்தனர். அப்போது இருவரும்நெருங்கிய தோழிகளாயினர்.
இந்நிலையில் இரண்டு பேரும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் ஆசிரமத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர்.இதையடுத்து சுமதி சென்னைக்கும், கீதா லட்சுமி கள்ளிப்பட்டிக்கும் சென்று விட்டனர்.
நான்கு நாட்களுக்கு முன் கீதா லட்சுமியின் வீட்டுக்கு சுமதி வந்தார். பின்பு இருவரும் பண்ணாரி அம்மன்கோவிலுக்குப் போவதாக கூறி விட்டுச் சென்றனர். அதன் பின்னர் அவர்கள் வீடு திரும்பவேயில்லை.
இந்த நிலையில் இருவரும் பண்ணாரி அருகே உள்ள தோரணபள்ளம் என்ற இடத்தில் பிணமாக கிடந்தது தெரியவந்தது. சத்தியமங்கலம் போலீஸார் அவற்றைக் கைப்பற்றினர்.
இரு பிணங்களும் பாதி அழுகிய நிலையில் இருந்தன. அவர்களுக்கு அருகே விஷம் அடங்கிய பாட்டிலும், ஒருடைரியும் கிடந்தது.
கீதாலட்சுமிக்கும், சுமதிக்கும் இடையே ஒரினச்சேர்க்கை பழக்கம் இருந்ததாகவும், அதை யோகா பள்ளியில்கண்டுபிடித்து வெளியேற்றி விட்டதாகவும் கூறப்படுகிறது. அவர்கள் எழுதி வைத்திருந்த தற்கொலைக் கடிதத்திலும்அவர்கள் இதைக் குறிப்பிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications