புலிகளுக்கு ஆதரவு: பொடா சட்டத்தின் கீழ் சென்னை பல் டாக்டர் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதாக சென்னையைச் சேர்ந்த பல் டாக்டர் ஒருவரை இன்று க்யூ பிரிவுபோலீசார் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

சென்னை-அண்ணாநகரைச் சேர்ந்த பல் டாக்டரான தாயப்பன், பழ.நெடுமாறனின் தமிழர் தேசிய இயக்கத்துடன்நெருங்கிய தொடர்பு வைத்துள்ளதாகக் கூறி இன்று காலை அவரது வீட்டில் க்யூ பிரிவுப் போலீசார்சோதனையிட்டனர்.

பின்னர் டாக்டர் தாயப்பனை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

கடந்த ஏப்ரல் மாதம் சென்னையில் நடந்த கூட்டத்தில் டாக்டர் தாயப்பனும் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காகஅவரைக் கைது செய்துள்ளதாகப் போலீசார் கூறினர்.

இதையடுத்து கடந்த மூன்று மாதங்களில் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை14ஆக உயர்ந்துள்ளது.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட அக்கட்சியைச் சேர்ந்த 10 பிரமுகர்கள், தமிழர் தேசிய இயக்கத்தலைவர் பழ. நெடுமாறன், அதன் பொதுச் செயலாளர்களான சுப. வீரபாண்டியன் மற்றும் பரந்தாமன் ஆகிய 13பேரும் ஏற்கனவே பொடா சட்டத்தின் கீழ் கைதாகி சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+