காவிரி வழக்கு: உச்ச நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

காவிரி விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடந்தபோது நீதிமன்றத்துக்கு வெடிகுண்டுவைக்கப்பட்டுள்ளதாக தொலைபேசி மிரட்டல் வந்தது. இதையடுத்து அங்கு தீவிர வெடிகுண்டு சோதனை நடந்து வருகிறது.

இன்று காலை இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது டெல்லி காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்குஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர், உச்ச நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என்றுமிரட்டிவிட்டு போனை வைத்துவிட்டார்.

இதையடுத்து மோப்ப நாய்ப் படைகளுடன் போலீசார் விரைந்தனர். வெடிகுண்டு நிபுணர்களும் விரைந்து வந்து சோதனையில்ஈடுபட்டுள்ளனர்.

10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகளும், ஆம்புலன்ஸ்களும் நீதிமன்ற வளாகத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு தமிழகத்துக்கு சாதகமாக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்துக்கு தினமும் தொடர்ந்து 9,000 கன அடி நீர் வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+