Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இமாம் அலி வேட்டை: 33 போலீசாருக்கு "அண்ணா பதக்கம்"

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பெங்களூரில் இமாம் அலி உள்ளிட்ட 5 தீவிரவாதிகளைச் சுட்டுக் கொன்ற 33 போலீசாருக்கு அண்ணாப் பதக்கம்வழங்கி, தலா ரூ.25,000 பரிசும் அளித்து கெளரவித்த முதல்வர் ஜெயலலிதா, தாக்குதலுக்குத் திட்டமிட்ட 5போலீஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பதக்கம் கிடைக்க பரிந்துரை செய்துள்ளதாகவும் கூறினார்.

இந்தப் பணியில் ஈடுபட்டிருந்த 38 காவல்துறையினரையும் சென்னை கோட்டைக்கு வரவழைத்து அவர்களுக்குபாராட்டு தெரிவித்தார் ஜெயலலிதா.

பின்னர் 25 அதிரடிப்படை கமாண்டோ வீரர்கள் உள்ளிட்ட 33 போலீசாருக்கும் தீரச் செயலுக்கான அண்ணாவிருதையும், தலா ரூ.25,000 ரொக்கப் பரிசும் வழங்கி கெளரவித்தார்.

மேலும் இந்தத் தீவிரவாதிகள் மீதான தாக்குதலுக்கு திறமையாகத் திட்டமிட்ட கோயம்புத்தூர் டி.ஐ.ஜி.அஷுகோஷ் சுக்லா, மதுரை குற்றப்பிரிவு துணை கமிஷனர் ஷகீல் அக்தர் உள்ளிட்ட ஐந்து போலீஸ்அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பதக்கம் கிடைப்பதற்காக அவர்களுடைய பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும்ஜெயலலிதா அறிவித்தார்.

இதைத் தவிர இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்து கைவிரல்களில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டுள்ளசப்-இன்ஸ்பெக்டர் செல்வம் டேவிட்டின் மருத்துவ செலவுகள் அனைத்தையும் அரசே ஏற்றுக் கொள்ளும் என்றுஅறிவித்த ஜெயலலிதா, அவருக்கு ரூ.2 லட்சம் உதவித் தொகையையும் வழங்கினார்.

இந்தப் பாராட்டு விழா நிகழ்ச்சியின் போது மாநில உள்துறை செயலாளர் முனீர் ஹோடா, டி.ஜி.பி. நெய்ல்வால்மற்றும் சென்னை மாநகரப் போலீஸ் கமிஷனர் விஜயகுமார் ஆகியோரும் இருந்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+