120 பஸ்கள்... கருப்புச் சட்டைகள்: போராட தயாராகிறது திரையுலகம்
சென்னை:
தமிழ்த் திரையுலகில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரும் எழுச்சிக் கொந்தளிப்பாக நெய்வேலியில் நடக்கப்போகும் மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்திற்காக கலைஞர்கள் அணிந்து கொள்ள கருப்புச் சட்டைகள்மற்றும் கைகளில் ஏந்திச் செல்ல கருப்புக் கொடிகள் தயாராகி வருகின்றன.
கன்னட நடிகர்களின் அநாரீகமான போராட்டத்திற்கு அதிரடியாக பதிலடி கொடுக்கும் வகையில், கர்நாடகத்திற்குமின்சாரம் கொடுக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி, நெய்வேலியில் வருகிற 12ம் தேதி அலைகடலென திரண்டுஆர்ப்பாட்டம், பேரணியும் நடத்தப் போகிறார்கள் திரையுலக கலைஞர்கள்.
ரஜினி காந்தை தூசாக மதித்து, ஓரம் கட்டி விட்டு அத்தனை கலைஞர்களும் தமிழ் உணர்வோடு இந்தப்பேரணியிலும், ஆர்ப்பாட்டத்திலும் கலந்து கொள்ள ஆர்வமாக உள்ளனர்.
கலைஞர்கள் போராட்டத்தில் கருப்புச் சட்டைகளுடன் கலந்துகொள்கின்றனர். இதற்காக கருப்புச் சட்டைகள் தைக்கஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டைகளின் பின்னால் காவிரிப் பிரச்சினைக்காக போராடும் கலைஞர்கள் என்ற வாசகம் இடம் பெறுகிறது.அத்தோடு கையில் பிடித்துக் கொள்ள கருப்புக் கொடிகளும் தயார் செய்யப்படுகின்றன.
முதலில் சென்னையிலிருந்து நடைப் பயணமாக நிெய்வேலி செல்ல கலைஞர்கள் முடிவு செய்திருந்தனர்.
ஆனால் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்பட்டு விடக் காரணமாகி விடக் கூடாது என்பதால் இங்கிருந்துநெய்வேலிக்குப் பஸ்களில் போய் அங்கு பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக 120 ஆம்னி பஸ்களும் புக் செய்யப்பட்டுள்ளன.
அரசியல் கட்சிகளையே மிஞ்சும் அளவுக்கு கலையுலகம் ஆரவாரத்துடன், தமிழ் உணர்வுடன் போராட்டத்திற்குத்தயாராகிக் கொண்டிருப்பது தமிழகத்தையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்து வருவது இயக்குனர் இமயம் தான்.












Click it and Unblock the Notifications