Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முதுமலையில் காயமடைந்த பெண் யானை பரிதாப சாவு

Subscribe to Oneindia Tamil

முதுமலை:

நீலகிரி மாவட்டம் முதுமலை வனப் பகுதியில் புரையோடிப் போன புண் காரணமாக உயிருக்குப் போராடி வந்தபெண் யானை ஒன்று சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தது.

முதுமலை வனப் பகுதியில் சில நாட்களுக்கு ன்பு ஒரு பெண் யானை, நொண்டியபடி நடந்து வந்தது. இதைப்பார்த்த சிலர் வனத்துறை அதிகாரிகளுக்குத் தகவல்கொடுத்தனர்.

புண் காரணமாகவே அது நொண்டுகிறது என்பதை அறிந்த வனக் காவலர்கள் யானையைப் பிடிக்க முயற்சிசெய்தனர். கடந்த நான்கு நாட்களாக 30க்கும் மேற்பட்ட வனக்காவலர்கள் வேறு சில யானைகள் மற்றும்மருந்துகளுடன் அந்த யானையைத் தேடி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை யானை சிக்கியது. மயக்க மருந்து கொடுத்து அதை மயக்கப்படுத்திய பின்,யானையின் காலை ஆராய்ந்தபோது அதில் புழுக்கள் நெளியும் அளவுக்கு புரையோடிப் போய் இருந்தது தெரியவந்தது.

விலங்குகளைப் பிடிப்பதற்காக வைக்கும் பொறியில் யானையின் கால் சிக்கியுள்ளது. அந்தக் கம்பி மிகவும்இறுக்கமாக இருந்ததால், யானையின் காலுக்குள் போய் புண் ஏற்பட்டு புரையோடி விட்டது. அந்த கம்பிஅகற்றப்பட்ட பின் மருந்து போடப்பட்டது.

இருப்பினும் புண் மூலம் ஊடுருவிய புழுக்கள் அந்த யானையின் உடலுக்குள் பல இடங்களுக்கும் பரவிவிட்டதால், சிகிச்சை பலனளிக்காமல் அது பரிதாபமாக இறந்தது.

பெண் யானை ஒன்று இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையேயும் வனத்துறை ஊழியர்களிடையேயும் பெரும்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+