டெல்லியில் ரஜினியின் அடுத்த "பல்டி": ரிஷிகேஷ் தான் போகிறாராம்
டெல்லி:
காவிரி விவகாரம் தொடர்பாக வாஜ்பாயைச் சந்திப்பதற்காகத் தான் நடிகர் ரஜினிகாந்த் செல்கிறார் என்றபரபரப்பான தகவல்களுக்கிடையில் இங்கு வந்த அவர், டெல்லி வழியாக ரிஷிகேஷ் போவதற்காகத் தான் இங்குவந்து சேர்ந்துள்ளதாகக் கூறினார்.
காவிரி விவகாரம் குறித்து பிரதமர் வாஜ்பாய் மற்றும் துணைப் பிரதமர் அத்வானி ஆகியோரிடம்விவாதிப்பதற்காக ரஜினி டெல்லி செல்கிறார் என்று இன்று காலையிலேயே சென்னையில் பரபரப்பான தகவல்கள்வெளியாகின.
அதை நிரூபிப்பது போல ரஜினியும் தன் மனைவி லதா ரஜினிகாந்த்துடன் இன்று காலை டெல்லி கிளம்பினார்.
டெல்லி கிளம்பும் முன் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறுகையில், காவிரியில்தமிழகத்திற்குக் கர்நாடகம் நீர் திறந்துவிட வேண்டும் என்று கோரி தமிழ் திரையுலகினர் வரும் 12ம் தேதிநெய்வேலியில் நடத்தும் முற்றுகைப் போராட்டத்தில் கட்டாயம் கலந்து கொள்வேன். ஆனால் இந்தப் பேரணிப்போராட்டத்தால் ரத்த ஆறு ஓடும் சூழ்நிலை ஏற்பட்டால் அதில் நிச்சயம் கலந்து கொள்ள மாட்டேன் என்றார்.
காவிரி விவகாரம் குறித்து பிரதமரிடம் என்ன பேசப் போகிறீர்கள் என்று ஒரு நிருபர் கேட்டதற்குஒவ்வொன்றையும் இங்கே நான் உங்களிடம் கூறிக் கொண்டிருக்க முடியாது என்று கூறிவிட்டு விறுவிறுவென்றுவிமானம் நோக்கி நடந்து சென்று விட்டார்.
இந்நிலையில் டெல்லி வந்து சேர்ந்த ரஜினியிடம் அவருடைய வருகைக்காகவே விமான நிலையத்தில் காத்திருந்தநிருபர்களிடம் அவர் எதுவும் பேசத் தயாராக இல்லை.
""நான் டெல்லி வழியாக ரிஷிகேஷ் போய்க் கொண்டிருக்கிறேன். அவ்வளவு தான்"" என்று கூறினார்.
காவிரி விவகாரம் குறித்து நிருபர்கள் கேட்டதற்கு, என்னுடைய முடிவை நான் சென்னையிலேயே கூறிவிட்டேன்என்று பதில் கூறிவிட்டு வேறு எந்தக் கேள்விகளுக்கும் காத்திராமல் விடுவிடுவென்று போய்விட்டார்.
வாஜ்பாயைச் சந்திப்பதற்காக அவர் பிரதமர் அலுவலகத்தில் ஏதாவது "அப்பாயின்ட்மெண்ட்" வாங்கியுள்ளாராஎன்பது குறித்தும் சரியாகத் தெரியவில்லை.












Click it and Unblock the Notifications