பிளாஸ்டிக் சாலைகள்: மதுரை மாணவர்களின் சாதனை
மதுரை:
பிளாஸ்டிக் கழிவுகளை வைத்து தார்ச் சாலை போட்டு சாதனை படைத்துள்ளனர் மதுரை தியாகராஜர் பொறியியல்கல்லூரி மாணவர்கள்.
பிளாஸ்டிக்கிலிருந்து வெளியாகும் டையாக்ஸின் வேதிப்பொருளால் புற்று நோய் போன்றவை உருவாகும்அபாயம் இருப்பதால் பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்து உள்ளது.
இந்நிலையில் பிளாஸ்டிக்கை ஆக்கபூர்வமாகவும் பயன்படுத்த முடியும் என்று தியாகராஜர் பொறியியல் கல்லூரிமாணவர்கள் நிரூபித்துள்ளனர்.
வீணாகும் பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு சாலை போட்டு ஆச்சரியப்படுத்தியுள்ளனர் இந்த மாணவர்கள்.இக்கல்லூரியின் வேதியியல் பிரிவு பேராசிரியர் வாசுதேவன் தலைமையில் தான் மாணவர்கள் இந்தசாதனையைப் புரிந்துள்ளனர்.
தங்கள் கல்லூரி வளாகத்திற்குள்ளேயே இந்த சாலையைப் போட்ட அவர்கள் அதில் வெற்றி கிடைக்கவே தற்போதுஅரசு அனுமதியுடன் கோவில்பட்டியில் 100 மீட்டர் அளவுக்கு சாலை அமைத்து சரித்திரம் படைத்துள்ளனர்.
இந்த பிளாஸ்டிக் சாலைக்கு அதிக பலம் இருப்பதாகவும், சாலை போடுவதற்கு அதிக தண்ணீர் தேவைப்படாதுஎன்றும், மழைக் காலங்களில் இந்தச் சாலையில் தண்ணீர் தேங்காது என்றும் பேராசிரியர் வாசுதேவன் கூறினார்.