சட்டசபை காங். உறுப்பினர்களாகும் 18 த.மா.கா. எம்.எல்.ஏக்கள்
மதுரை:
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்த 18 எம்.எல்.ஏக்களை காங்கிரஸ்எம்.எல்.ஏக்களாக சபாநாயகர் காளிமுத்து அங்கீகரித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
சமீபத்தில் சட்டசபை தமாகா தலைவர் எஸ்.ஆர். பாலசுப்ரமணியம் என்னைச் சந்தித்து 18 தமாகா எம்.எல்.ஏக்களின்பெயர்களைக் கொடுத்து காங்கிரஸில் தாங்கள் இணைந்து விட்டதாகவும், தங்களை காங்கிரஸ் எம்.எல்.ஏக்களாகஅங்கீகரிக்குமாறும் கோரியிருந்தார்.
அவர் கொடுத்த கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு 18 பேரும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களாக அங்கீகரிக்கப்படுகின்றனர்.
அதேசமயம், குமாரதாஸ், ஹக்கீம் உள்ளிட்ட 5 தமாகா எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து தமாகா எம்.எல்.ஏக்களாகவேசெயல்படுவார்கள்.
தமாகா என்று ஒரு கட்சியே இல்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்தால் அப்போது இந்த 5 எம்.எல்.ஏக்களின்பதவி குறித்து முடிவு செய்யப்படும் என்றார் காளிமுத்து.