For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காவிரியை வைத்து கர்நாடகத்தில் அரசியல் மோதல் ஆரம்பம்

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூர்:

காவிரியை வைத்து அரசியல் லாபம் தேட கர்நாடக முதல்வர் கிருஷ்ணா நடத்தி வரும் யாத்திரைக்குப் போட்டியாக இயக்கம்நடத்த மதசார்பற்ற ஜனதா தளத்தின் தலைவரும் முன்னாள பிரதமருமான தேவே கெளடா திட்டமிட்டுள்ளார்.

இன்று நிருபர்களிடம் பேசிய கெளடா,

காவிரி விவகாரத்தை குழப்பியதே கிருஷ்ணா தான். இப்போது அதை மறைக்க யாத்திரை என்ற பெயரில் அரசியல் பேரணிநடத்திக் கொண்டிருக்கிறார். தமிழகத்துக்கு தண்ணீர் விட வேண்டாம் என்பதில் அரசுக்கு எல்லா கட்சிகளும் ஆதரவு தந்து வரும்நிலையில் இந்தப் பேரணி நடத்த வேண்டிய அவசியம் என்ன?

ஒரு மாநிலத்தின் முதல்வரே இப்படி மக்களைத் தூண்டிவிடும் யாத்திரை நடத்துகிறார். இதை சோனியா கண்டிக்க வேண்டும்.

கிருஷ்ணாவின் தோல்விகளை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வரும் 10ம் தேதி முதல் 13ம் தேதி வரை இயக்கம் நடத்துவோம்.காவிரி உருவாகும் இடமான தலைகாவிரியில் உள்ள பாகமண்டலாவில் இந்த இயக்கம் தொடங்கும். காவிரி பாயும்மாவட்டங்களுக்கு எல்லாம் இந்த இயக்கப் பேரணி செல்லும்.

கிருஷ்ணாவுக்காக கர்நாடகத்தையே தண்டித்துவிட வேண்டாம் என உச்ச நீதிமன்றத்தைக் கேட்டுக் கொள்கிறேன் என்றார்கெளடா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X