"ஜெ. தூண்டினார், போலீசார் தோண்டினர்": தாமரைக்கனி கோபம்
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீவில்லிபுத்தூர்:
முதல்வர் ஜெயலலிதாவின் தூண்டுதலின் பேரில் தான் தனது வீட்டைத் தோண்டி லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள்சோதனை நடத்தியதாக முன்னாள் எம்.எல்.ஏ. தாமரைக்கனி கூறினார்.
தாமரைக்கனியின் ஸ்ரீவில்லிபுத்தூர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று திடீர் சோதனைநநிடத்தினர்.
சோதனைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் தாமரைக்கனி பேசுகையில்,
இது ஜெயலலிதாவின் தூண்டுதலின் பேரில் நடந்த சோதனை. எனது பெயரில் சொத்துக்கள் எதுவும் கிடையாதுஎன்று உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே நான் கூறியுள்ளேன்.
அது தொடர்பாகவே விசாரிக்க வந்ததாக போலீஸார் தெரிவித்தனர். ஆனால் வீட்டைத் தோண்டி சோதனைநடத்தியுள்ளனர்.
என்னைப் பழி வாங்கவும், அவமானப்படுத்தவும் ஜெயலலிதா தூண்டுதலின் பேரில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார்இந்த சோதனையை நடத்தியுள்ளனர் என்றார் தாமரைக்கனி.












Click it and Unblock the Notifications