வங்கக் கடலில் புயல் சின்னம்: சென்னையில் கன மழை
சென்னை:
வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ளதைத் தொடர்ந்து சென்னையில் பலத்த மழை பெய்து வருகிறது.காவிரி டெல்டா பகுதிகளிலும் அடுத்த ஒருசில நாட்களில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த பல மாதங்களாக தமிழகத்தை வெயில் வறுத்து எடுத்துக் கொண்டிருந்தது. இதனால் அக்டோபர்மாதத்திலாவது வடகிழக்குப் பருவமழை பெய்து வெப்பம் தணியும் என்று மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர்.
அவர்களை மகிழ்விக்கும் வகையில் நேற்று இரவிலிருந்தே இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்யத்தொடங்கியது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாகவே சென்னையில் பலத்த மழை பெய்து வருகிறது.இதனால் சென்னையின் பல தாழ்வான பகுதிகளிலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. சென்னையைச் சுற்றியுள்ளஏரிகளிலும் ஓரளவு நீர் மட்டம் அதிகரித்துள்ளது.
இதற்கிடையே சென்னைக்குக் கிழக்கே வங்கக் கடலில் தோன்றியுள்ள இந்தப் புயல் சின்னம் படிப்படியாகத்தென்மேற்குத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதால், காவிரி டெல்டாப் பகுதிகளிலும் அடுத்த சிலநாட்களுக்கு நல்ல மழை பெய்யும் என்று தெரிகிறது.
காவிரியில் தமிழகத்திற்கு கர்நாடகம் நீர் திறந்துவிட மறுத்ததைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள காவிரி டெல்டாவிவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே குறுவை சாகுபடி முழுமையாகப் பாதிக்கப்பட்டநிலையில் தற்போது சம்பா பயிர்களும் கறுகிக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் தற்போது தோன்றியுள்ள புயல் சின்னம் காரணமாக மழை பெய்தால் மட்டுமே காவிரி டெல்டாபகுதிகளில் உள்ள சம்பா பயிர்கள் தப்பிப் பிழைக்கும் என்று தெரிகிறது. இதனால் காவிரி டெல்டா விவசாயிகள்இந்த மழையை வெகு ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications