For Daily Alerts
Just In
பந்த்துக்கு தென் மாவட்டங்களில் முழு ஆதரவு
மதுரை:
மதுரை, திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பந்துக்கு முழு ஆதரவு கிடைத்தது.
தமிழகத்தின் மற்ற இடங்களைப் போலவே தென் மவாட்டங்களிலும் இந்த பந்தினால் இயல்பு வாழ்க்கை மிகப் பெரும் அளவில்பாதிக்கப்பட்டது.
வங்கிகள், மத்திய அரசு அலுவலகங்கள் திறந்திருந்தாலும் ஊழியர்கள் யாரும் வரவில்லை.
பள்ளி, கல்லூரிகள், ஹோட்டல்கள், தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. சாலைகளும் காலியாகக் கிடந்ததால் மதுரை மாநகரம்முழுவதுமே ஸ்தம்பித்துப் போனது.
மாலை 6 மணிக்கு மேல் அனைத்துப் பகுதிகளிலும் இயல்பு நிலை சீரடைந்தது.
Story first published: Wednesday, October 9, 2002, 5:30 [IST]