27 ரயில்கள் ரத்து: 15 ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தம்
சென்னை:
தமிழகத்தில் இன்று நடைபெறும் பந்த்தையொட்டி 27 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் 15 ரயில்கள்ஆங்காங்கே உள்ள ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டுள்ளன.
அனைத்துக் கட்சிகளும் இணைந்து அழைப்பு விடுத்துள்ள இன்றைய பந்த் காரணமாக ரயில் போக்குவரத்தும்முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
ரத்தான ரயில்கள்:
இதையடுத்து தமிழகத்தில் 27 ரயில்கள் இன்று மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அந்த ரயில்களின் விவரம்:
சென்னை சென்ட்ரலிலிருந்து கிளம்பி மீண்டும் வரும் மைசூர் சதாப்தி எக்ஸ்பிரஸ், கோவை எக்ஸ்பிரஸ்,பிருந்தாவன் எக்ஸ்பிரஸ், மங்களூர் எக்ஸ்பிரஸ், வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ், பெங்களூர் எக்ஸ்பிரஸ், லால்பாக்எக்ஸ்பிரஸ், கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், பெங்களூர் பாசஞ்சர் ரயில் உள்ளிட்ட ரயில்கள் ஆகியவை ரத்துசெய்யப்பட்டுள்ளன.
இவை தவிர சென்னை எழும்பூரிலிருந்து இயங்கும் வைகை, பல்லவன், மதுரை சிறப்பு ரயில், தாம்பரத்திலிருந்துஇயங்கும் சோழன் எக்ஸ்பிரஸ், சேது எக்ஸ்பிரஸ் ஆகியவை உள்ளிட்ட ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மொத்தம் 27 ரயில்கள் வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.
பாதியிலேயே நிறுத்தப்படும் ரயில்கள்:
இந்நிலையில் தமிழகத்தில் பாதி வழியிலேயே நிறுத்தப்பட்டுள்ள ரயில்கள் விவரம் (அடைப்புக் குறிக்குள்நிறுத்தப்படும் இடங்கள்):
பெங்களூர-தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் (திண்டுக்கல்), நாகூர்-தாம்பரம் எக்ஸ்பிரஸ் (செங்கல்பட்டு),ராமேஸ்வரம்-தாம்பரம் எக்ஸ்பிரஸ் (விழுப்புரம்), திருவனந்தபுரம்-சென்னை எக்ஸ்பிரஸ் (விழுப்புரம்),லக்னோ-சென்னை எக்ஸ்பிரஸ் (சூலூர்பேட்டை), வாரணாசி-சென்னை எக்ஸ்பிரஸ் (நாயுடுபேட்டை), பொகாரோஸ்டீல் சிட்டி-ஆலப்புழா எக்ஸ்பிரஸ் (காட்பாடி), திருப்பதி-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் (திருப்பதி),தாம்பரம்-காரைக்குடி எக்ஸ்பிரஸ் (திருவாரூர்), தூத்துக்குடி-சென்னை எக்ஸ்பிரஸ் (தாம்பரம்),ஹைதராபாத்-சென்னை சார்மினார் எக்ஸ்பிரஸ் (கும்மிடிப்பூண்டி), மும்பை லோக்மான்யா திலக்டெர்மினஸ்-மதுரை எக்ஸ்பிரஸ் (விழுப்புரம்), சென்னை-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் (திருநெல்வேலி),சென்னை-திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் (மதுரை), சென்னை-திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் (திருநெல்வேலி).
இவை அனைத்தும் நிறுத்தப்பட்ட இடத்திலிருந்து இன்று மாலை 6 மணிக்குப் புறப்பட்டுச் செல்லும்.