ஊருக்குள் புகுந்த சிறுத்தை தாக்கி 2 பேர் காயம்
Subscribe to Oneindia Tamil
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியில் காட்டிலிருந்து திசை மாறி வந்த சிறுத்தை தாக்கி 2 பேர்காயமடைந்தனர்.
அந்தியூர் காட்டுப் பகுதியிலிருந்து இந்த சிறுத்தை வழி மாறி பெருந்துறைக்குள் புகுந்து விட்டது. வழியில்தென்பட்ட 2 பேரை தாக்கியது. இதில் அவர்கள் படுகாயமடைந்தனர். உடனடியாக இருவரும் மருத்துவமனைக்குக்கொண்டு செல்லப்பட்டனர்.
தாக்கிய சிறுத்தை அப்பகுதியில் காட்டுக்குள் பதுங்கியுள்ளது. அதைப் பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சியில்ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications