உண்ணாவிரதம் இருக்க போலீசிடம் அனுமதி கோருகிறார் ரஜினி
சென்னை:
சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள சீரணி அரங்கம் அல்லது காந்தி சிலை அல்லது வள்ளுவர் கோட்டம்எதிரே உண்ணாவிரதம் இருக்க அனுமதி தருமாறு நகர் ரஜினி காந்த் சார்பில் சென்னை போலீஸிடம் கடிதம்கொடுக்கப்பட்டுள்ளது.
நெய்வேலியில் தமிழ்த் திரையுலகினர் ஒன்று திரண்டு கர்நாடகத்திற்கு எதிராக போராட்டம் நடத்தும் 12ம் தேதிதனியே சென்னையில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக ரஜினி கூறியுள்ளார்.
இந் நிலையில் ரஜினி சார்பில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரி அவரது ரசிகர் சங்கத் தலைவரானசத்யநாராயண ராவ் சென்னை போலீஸ் கமிஷனர் விஜயகுமாரிடம் கடிதம் கொடுத்துள்ளார்.
அந்தக் கடிதத்தில், மெரீனா கடற்கரையில் உள்ள சீரணி அரங்கம், காந்தி சிலை அல்லது வள்ளுவர் கோட்டம்எதிரே உண்ணாவிரதம் இருக்க அனுமதி தருமாறு கோரப்பட்டுள்ளது.
உண்ணாவிரதம் இருக்கலாம் என்றும் இடம் குறித்து பரிசீலித்து அனுமதி தருவதாகவும் சத்யநாராயண ராவிடம்விஜயக்குமார் தெரிவித்தார்.
அதன் பிறகு வெளியே வந்த சத்யநாராயணன் ராவிடம் செய்தியாளர்கள் பேசினர்.
ஒருவேளை அரசு அனுமதி தராவிட்டால் தடையை மீறி ரஜினி உண்ணாவிரதம் இருப்பாரா என்று கேட்டபோது,அதுமாதிரியான சூழ்நிலை எழாது என்றார் ராவ்.












Click it and Unblock the Notifications