பாரதிராஜாவுக்கே என் ஆதரவு: ராமதாஸ்
சென்னை:
தமிழக விவசாயிகளுக்காக திரையுலகில் முதலில் குரல் கொடுத்த பாரதிராஜாவுக்குத் தான் எனது ஆதரவு தொடரும்.இந்த விவகாரத்தில் திரையுலக ஒற்றுமையைக் குலைக்க முயலும் தனிப்பட்ட மனிதர்களை (ரஜினியை) நான் மிகக்கடுமையாக எதிர்க்கிறேன் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்,
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரிப் பிரச்சினையில் தமிழக விவசாயிகளுக்காகமுதலில் குரல் கொடுத்தவர் பாரதிராஜாதான். எனவே அவர் தலைமையில் நெய்வேலியில் நடக்கும்போராட்டத்திற்குத்தான் ஆதரவு கொடுக்கப்பட வேண்டும். அது தான் நியாயமும் கூட.
இதில் ஒரு சிலர் புகுந்து தமிழர்களின் ஒற்றுமையை குலைக்க முயல்கின்றனர். அவர்கள் எப்போதும் தங்கள்தனித்தன்மையை இழக்க மாட்டார்களாம். தனித்து தான் இருப்பார்களாம். அவர்களை மக்கள் அடையாளம் கண்டுகொண்டுவிட்டனர். அந்த நபர்களை மக்கள் விரைவில் ஒதுக்கி ஓரம் கட்டி உண்மையிலேயேதனிமைப்படுத்துவார்கள்.
காவிரி விவகாரத்தில் அரசியலுக்கே இடமில்லை. இது நம் மாநில உரிமைப் போராட்டம். இதில் கூட ஒற்றுமைகாட்ட முடியாதா? சிலரால் இந்த ஒற்றுமை குலைவது கடும் கண்டனத்துக்குரியது, வருத்தத்திற்குரியது.
எப்படியிருப்பினும் பாரதிராஜா தலைமையிலான போராட்டக் குழுவினருக்கு பா.ம.க. முழு ஆதரவு தருகிறது. இந்தஆதரவு எப்போதும் தொடரும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications