நெய்வேலிக்கு போக மாட்டேன்: சரத்குமார்
சென்னை:
நெய்வேலியில் நடக்கும் போராட்டத்தில் கலந்து கொள்ள மாட்டேன் என்று சரத்குமார் அறிவித்துள்ளார்.
இந்தப் போராட்டத்தில் திமுக நடிகர்கள் பங்கேற்கக் கூடாது என்று கட்சியின் தலைவர் கருணாநிதிஉத்தரவிட்டுள்ளார். இதை ஏற்று போராட்டத்தை புறக்கணிக்கப்பதாக சரத்குமார் கூறியுள்ளார்.
முன்னதாக சரத்குமார் இன்று காலை திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்துப் பேசினார். பின்னர் ரஜினியின் வீட்டுக்குச் சென்றுஅவரையும் சந்தித்தார்.
இதன் பின்னர் சரத்குமார் கூறியதாவது:
நெய்வேலி போராட்டம் என்பது தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்தும் போராட்டம் அல்ல. பாராதிராஜாதலைமையில் உருவான அமைப்பு நடத்தும் போராட்டம். இதற்கு நாங்கள் ஆதரவு தந்தோம்.
ஆனால், பாரதிராஜாவும் போராட்டக் குழுவினரும் கருணாநிதியை ஏன் சந்திக்கவில்லை? அவரைச் சந்தித்துஆலோசனை நடத்தத் தவறிவிட்ட இவர்களுக்கு திமுக ஆதரவு தராதது தவறில்லை.
அதே போல போராட்டத்தை சென்னையில் நடத்தலாம் என்ற ரஜினியின் யோசனையை ஏன் போராட்டக்குழுவினர் புறக்கணித்தனர்? இதை முதல்வர் ஜெயலலிதாவிடம் எடுத்துச் சொல்லி இருக்க வேண்டும். ஆனால்,போராட்டக் குழுவினர் அதையும் செய்யவில்லை. ரஜினியை எதிரியாகவே சித்தரித்துவிட்டோம்.
இரு மாநிலங்களுக்கு இடையே பிரச்சனை வரும் வகையில் நாம் செயல்படக் கூடாது. ஆனால், பிரச்சனைஉருவாகும் என்று தெரிவதால் அந்தப் போராட்டத்தை நான் புறக்கணிக்கிறேன்.
என்னைப் பொறுத்தவரை திமுக எப்படி போராட வேண்டும் என்று சொல்கிறதோ, காவிரி விவகாரத்தில் மிகஅழகாக தீர்வு கண்ட தலைவர் கருணாநிதி எப்படி சொல்கிறாரோ அப்படிப் போராடுவேன். டி.ராஜேந்தர்,சந்திரசேகர், நெப்போலியன் ஆகியோர் அவர் சொல்வது போல கேட்டு களம் இறங்குவோம்.
நெய்வேலிக்கும் போக மாட்டோம், ரஜினியின் உண்ணாவிரதத்திலும் பங்கேற்க மாட்டோம்.
என்னை வாழ வைக்கும் தமிழக மக்களுக்கும், ரசிகர்களுக்கும் மூச்சு உள்ளவரை நன்றியுடன் இருந்துபோராடுவேன்.
இவ்வாறு சரத்குமார் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications