தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்
சென்னை:
சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலைஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.
அரபிக் கடலில் தென்கிழக்குப் பகுதியில் இரண்டு இடங்களில் குறைந்த காற்றழுத்த மண்டலங்கள்உருவாகியிருப்பதால் தமிழகத்தின் அனைத்துப் பகுதியிலும் மழை பெய்து வருகிறது.
இந்த மழை மேலும் 2 நிாட்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவிக்கிறது.
சென்னை நகரில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கோவையில்தான் மிக பலத்த மழை பெய்துள்ளது. அங்குஇயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நகரின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. சிலஇடங்களில் வீடுகள் இடிந்துள்ளன.
பெரம்பலூர் மாவட்டம் பிலாக்குறிச்சியில் மின்னல் தாக்கி விவசாயி ஒருவர் மரணமடைந்தார். அவர் மேய்த்துக்கொண்டிருந்த 10 ஆடுகளும் மின்னலுக்குப் பலியாயின.
கர்நாடகம் துரோகம் செய்துவிட்ட நிலையில் இந்த மழையால் தமிழக விவசாயிகளுக்கு விடிவு வந்தால் சரி.












Click it and Unblock the Notifications