நெய்வேலி போராட்டம்: பெங்களூரில் பதற்றம்
பெங்களூர்:
கர்நாடகத்திற்கு எதிராக தமிழ் நடிகர்கள் நெய்வேலியில் போராட்டம் நடத்தும் நாளைய தினத்தை கறுப்புதினமாக அனுசரிப்போம். நாளை பெங்களூர் வரும் அனைத்து தமிழக வாகனங்களையும் தடுத்து நிறுத்துவோம்என்று கன்னட ரக்ஷனா வேதிகே என்ற அமைப்பு அறிவித்துள்ளது.
இதுகுறித்து அவ்வமைப்பின் தலைவரான ஜானகேரெ வெங்கட்ராமய்யா கூறுகையில்,
கர்நாடகத்திற்கு எதிராக தமிழ் நடிகர்கள் போராட்டம் நடத்தும் 12ம் தேதியை நாங்கள் கறுப்பு தினமாகஅனுசரிப்போம்.
நாளை கறுப்பு துணியை அணிந்து கொண்டு மல்லேஸ்வரத்திலிருந்து ஆளுநர் மாளிகைக்கு ஊர்வலம் செல்வோம்.
மேலும் ஓசூர் சாலையில் அத்திப்பள்ளி, பழைய மெட்ராஸ் சாலையில் கே.ஆர். புரம் மற்றும் ஊட்டி சாலை ஆகியஇடங்களில் தமிழகத்திலிருந்து வரும் அம்மாநில வாகனங்களைத் தடுத்து நிறுத்துவோம்.
பெங்களூர் நகரில் வைக்கப்பட்டுள்ள திமுக மற்றும் அதிமுக கொடிகளையும் அகற்றுவோம் என்றார் அவர்.
இதனால் நாளை தமிழகத்துக்கும் பெங்களூர், மைசூர் இடையிலான பஸ் போக்குவரத்து பாதிக்கப்படும் சூழ்நிலைஎழுந்துள்ளது.
மேலும் நெய்வேலி போராட்டத்தைக் காரணமாக வைத்து தமிழர் பகுதிகளில் கன்னடர்கள் புகுந்து கலாட்டாசெய்யவும் வாய்ப்பு உள்ளது. இதனால் தமிழர் பகுதிகளில் பதற்றம் ஏற்படலாம் என்ற அச்சம் காரணமாக போலீஸ்பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே நெய்வேலி போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரில் கன்னட காவேரி போராட்டக்குழுவினர் ஊர்வலம் நடத்தினர்.
ஊர்வலத்தின் முடிவில் தமிழ் நடிகர்களின் படங்களும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கொடும்பாவிகளும்எரிக்கப்பட்டன.
ஊர்வலம் சென்ற பகுதிகளான குருபரஹள்ளி, குமார வியாச சர்க்கிள், நீலகண்டப்பா சாலை, ஜே.சி. நகர், காவேரிநகர், கமலா நகர் உள்ளிட்ட பல பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டன.












Click it and Unblock the Notifications