நெய்வேலி மின் நிலையம் தமிழ்நாட்டு சொத்தா?: கிருஷ்ணா
பெங்களூர்:
நெய்வேலி நிலக்கரி சுரங்கமும் மின் நிலையமும் தமிழகத்தின் சொத்துக்கள் அல்ல, அங்கிருந்து கர்நாடகத்துக்கு மின்சாரம் தரக்கூடாது என்று சொல்ல யாருக்கும் அதிகாரம் இல்லை என கர்நாடக முதல்வர் கிருஷ்ணா கூறியுள்ளார்.
இப்போது தமிழக எதிர்ப்பு பாதயாத்திரையில் ஈடுபட்டுள்ள கிருஷ்ணா மாண்டியா மாவட்டம் கஜ்ஜிலகரே அருகே நிருபர்களைசந்தித்தார். அப்போது நாளை தமிழ் திரையுலகினர் சார்பில் நடக்கவுள்ள நெய்வேலி போராட்டம் குறித்து கருத்துத் தெரிவித்தகிருஷ்ணா கூறியதாவது:
நெய்வேலி மின் நிலையம் மத்திய அரசுக்கு சொந்தமானது. இது தமிழகத்துடையது என்பது போல செய்திகள் வருவது தவறானது.அங்கிருந்து கர்நாடகத்துக்கு மின்சாரம் வருவதை யாரும் நிறுத்த முடியாது. மின் சப்ளை பாதிக்கப்படாது. இதனால் யாரும்கவலைப்படத் தேவையில்லை.
காஷ்மீரில் காங்கிரஸ் கட்சி அமோகமாக வெற்றி பெற்றுள்ளது. இது காங்கிரசுக்குக் கிடைத்த வெற்றி மட்டும்அல்ல. தலைவி சோனியாவுக்கே கிடைத்த வெற்றி. காஷ்மீர் மக்கள் ஜெயலலிதாவுக்கு பதில் தந்துவிட்டனர்.
இந்த வெற்றியைக் கண்ட பிறகாவது சோனியாவை வெளி நாட்டுக்காரர் என்று பேசுவதை ஜெயலலிதா நிறுத்திக்கொள்ள வேண்டும். ஜெயலலிதா இனி இந்த விஷயத்தில் வாயை மூடிக் கொள்ள வேண்டும்.
சோனியாவுக்கு மக்கள் அளித்து வரும் ஆதரவையும் ஜெயலலிதா புரிந்து கொள்ள வேண்டும்.
சோனியா வெளிநாட்டுக்காரர் என்று நாடு முழுவதும் போய் பிரச்சாரம் செய்யப் போவதாக ஜெயலலிதாகூறியிருந்தார். இப்போது நாட்டின் ஒரு பகுதி மக்கள் ஜெயலலிதாவுக்கு பதில் தந்துவிட்டனர். எனவே, அவர் இனிவாயைத் திறப்பது நல்லதல்ல என்றார் கிருஷ்ணா.












Click it and Unblock the Notifications