கர்நாடக முதல்வருக்கு உச்ச நீதிமன்றம் மீண்டும் நோட்டீஸ்
டெல்லி:
கர்நாடகத்துக்கு எதிராக தமிழகம் தாக்கல் செய்த இரண்டாவது வழக்கில் அம் மாநில முதல்வருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
அதில் உங்கள் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது? என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது
காவிரியில் நீர் விடுமாறு உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவை ஏற்க கர்நாடக முதல்வர் மறுத்து வருகிறார். இதையடுத்து அவர் மீதுஇரண்டு முறை அவமதிப்பு வழக்குகளைத் தொடர்ந்தது தமிழகம்.
முதல் வழக்கில் ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டு அவர் பதிலும் தாக்கல் செய்துள்ளார். அந்த வழக்கு விசாரணைநிலுவையில் உள்ளது.
இந் நிலையில் இரண்டாவது வழக்கில் இன்று மீண்டும் கிருஷ்ணாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த மனுவைவிசாரித்த நீதிபதிகள் காரே,அரிஜித் பசாயத், சின்ஹா ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் இந்த நோட்டீஸ் அனுப்பஉத்தரவிட்டது.
கிருஷ்ணா தவிர பாசனத்துறை அமைச்சர் பாட்டீல், தலைமைச் செயலாளர் ரவீந்திரா ஆகியோருக்கும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்அனுப்பியுள்ளது. மூவரும் வரும் 22ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நேரில் ஆஜராகவேண்டியதில்லை எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு விசாரணை 24ம் தேதி எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.
முன்னதாக பேசிய தமிழக வழக்கறிஞர் வேணுகோபால், நீதிமன்ற உத்தரவை கர்நாடகம் மதிக்கவே இல்லை. ஒரு துளி நீர் கூடவிடவில்லை. ஜூன் மாதம் முதல் கர்நாடகம் செய்து வரும் இந்த அட்டூழியத்தால் குறுவை சாகுபடியும் போய் இப்போது சம்பாபயிரிடவும் முடியாத நிலை உள்ளது. இதனால் தமிழகத்துக்கு ரூ. 239 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த நஷ்டத்தை கர்நாடகம்தான் ஈடுகட்ட வேண்டும் என்றார்.
உச்ச நீதிமன்றத்தில் இருந்து தனக்கு எதிரான கடும் தீர்ப்பை எதிர்பார்க்கும் கிருஷ்ணா அதை சமாளிக்க இப்போது காவிரி பாசனப்பகுதிகளில் பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார்.
இன்று 5வது நாளாக அவரது யாத்திரை தொடர்கிறது. 15ம் தேதி யாத்திரையை கிருஷ்ணராஜ சாகர் அணையில் முடிக்கத்திட்டமிட்டிருந்த அவர் எதிர்க் கட்சிகளின் விமர்சனத்தால் நாளையே அதை முடித்துக் கொண்டு காரில் அந்த அணைக்குச்செல்கிறார்.
பொதுக் கூட்டத்திலும் பேசுகிறார். உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தனக்கு எதிராக இருக்கும் நிலையில் அரசியல்ரீதியில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள இந்த யாத்திரையை மேற்கொண்டுள்ளார் கிருஷ்ணா.












Click it and Unblock the Notifications