""ரஜினி போக்கு தமிழ் இனத்தின் மீதான தாக்குதல்""
சென்னை:
சென்னையில் தனியாக உண்ணாவிரதம் இருக்கப் போவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளது தமிழ் இனத்தின்மீது நடத்தப்படும் தாக்குதலுக்கான கூட்டுச் சதி என்று சமூக நீதிக் கட்சித் தலைவர் ஜெகவீரபாண்டியன்கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்த் திரையுலகமே ஒன்று திரண்டு காவிரிப் பிரச்சினையில் அரசுக்கு ஆதரவாகவும், எழுச்சியோடும்போராட்டம் நடத்தப் போகும் நேரத்தில் தனியாக போராட்டம் நடத்த ரஜினி முடிவு செய்துள்ளது மிகவும்கண்டிக்கத்தக்கது.
ரஜினியின் இந்தப் போக்கு, தமிழ் இனத்தின் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கான கூட்டுச் சதியோ என்று அஞ்சத்தோன்றுகிறது. உடனடியாக தனது உண்ணாவிரதப் போராட்டத்தை ரஜினி கைவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன் கூறுகையில்,
நெய்வேலி தமிழகத்தில்தான் உள்ளது. பாகிஸ்தானிலோ அல்லது கர்நாடகத்திலோ இல்லை. எனவே அங்குபாதுகாப்பு இருக்காது என்று ரஜினி கூறுவதை ஏற்க முடியாது. அதில் அர்த்தமும் இல்லை.
தமிழ்த் திரையுலகை பிரிக்கும் விதத்தில் திமுக நடிகர்கள் போராட்டத்தில் கலந்து கொள்ள முடியாது என்றுகருணாநிதி கூறியிருப்பது சரியல்ல என்றார் திருமாவளவன்.












Click it and Unblock the Notifications