ரஜினியை நேரில் வாழ்த்திய இளங்கோவன், திருநாவுக்கரசர்
சென்னை:
உண்ணாவிரதம் இருக்கும் ரஜினியை காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் சோ.பாலகிருஷ்ணன், செயல் தலைவர்இளங்கோவன் ஆகியோர் வந்து வாழ்த்திவிட்டுச் சென்றனர்.
இளங்கோவன் கூறுகையில், காவல்துறையினரின் பாதுகாப்பு சரியாக இல்லை. வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தக் கூட்டத்திற்கு போதுமான பாதுகாப்பு இல்லை. ரஜினியை பார்க்க வரும் ரசிகர்களையும், காங்கிரஸ் தொண்டர்களையும்போலீஸார் தடியடி நடத்திக் கலைக்கின்றனர்.
பாரதிராஜா அடிக்கடி தாயுள்ளம் என்று கூறிக் கொண்டிருப்பதை விட பேசாமல் அந்த தாயிடமே சென்று சரண் அடைந்து விடலாம்என்றார் இளங்கோவன்.
காங்கிரஸ் தலைவர் சோ.பாலகிருஷ்ணன் கூறுகையில், நல்ல காரியத்திற்காக நடக்கிறது இந்தப் போராட்டம். ரஜினிகாந்த் மக்கள்செல்வாக்கு பெற்ற சிறந்த தலைவர். போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும் என்றார்.
அதேபோல் பாரதீய ஜனதா சார்பில் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர், முன்னாள் அதிமுக அமைச்சர் எச்.வி. ஹண்டே ஆகியோர்நேரில் வந்து மாலை அணிவித்துவிட்டு ரஜினியை வாழ்த்தினர்.
முன்னாள் அதிமுக அமைச்சர் கண்ணப்பனும் ரஜினியை நேரில் சந்தித்து வாழ்த்துக் கூறிவிட்டுச் சென்றார். அதேபோல் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகமும் ரஜினிக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.
சத்யா மூவீஸ் அதிபரும் முன்னாள் அதிமுக அமைச்சருமான ஆர்.எம். வீரப்பனும் நேரில் வந்து ரஜினியை வாழ்த்தினார்.