""கங்கை- காவிரி இணைப்புக்காக ரூ.1 கோடி தரத் தயார்"": ரஜினி
சென்னை:
கங்கை-காவிரி இணைப்பை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என்றும் அதற்காக நான் ரூ.1 கோடிதருவதற்குத் தயாராக உள்ளேன் என்றும் நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.
தமிழகத்திற்கு காவிரியில் கர்நாடக அரசு நீர் திறந்துவிட வேண்டும் என்று வலியுறுத்தி இன்று சென்னையில்உண்ணாவிரதம் இருந்த நடிகர் ரஜினிகாந்த், இது தொடர்பான மனு ஒன்றை தமிழக ஆளுநரிடம் அளிப்பதற்காகராஜ்பவனுக்குச் சென்றார்.
ஆளுநர் ராமமோகன் ராவ் சென்னையில் இல்லாததால் அவருடைய செயலாளரைச் சந்தித்த ரஜினி, காவிரியில்தமிழகத்திற்கு நீர் திறந்துவிட கர்நாடக அரசை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று கோரி இது தொடர்பாகஒரு மனுவையும் அவரிடம் கொடுத்தார்.
அப்போது கங்கை-காவிரி இணைப்புத் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் ரஜினிவலியுறுத்தினார்.
இந்தத் திட்டத்திற்காக நான் ரூ.1 கோடி வரை தரத் தயாராக இருக்கிறேன் என்றும் ரஜினி அப்போது கூறினார்.












Click it and Unblock the Notifications