"ஈவ் டீசிங்" பாதிப்பு மாணவிகளுக்கு ரூ.1 லட்சம் உதவி: ஜெ. வழங்கினார்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஈவ் டீசிங் கொடுமையால் பாதிக்கப்பட்ட 2 மாணவிகளுக்கு தமிழக முதல்வர்ஜெயலலிதா இன்று தலா ரூ.1 லட்சம் உதவித் தொகையை வழங்கினார்.

கன்னியாகுமரி மாவட்டம் கல்குளத்தில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்த இரண்டு மாணவிகளை அதேபள்ளியைச் சேர்ந்த ஒரு மாணவன் கொடூரமான முறையில் ஈவ் டீசிங் செய்தான்.

அந்த மாணவிகளின் முகத்தில் அவன் ஆசிட்டை வீசியதால் அவர்களின் முகம் வெந்து போனது. இருவருக்கும்முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டது.

தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இந்தச் சம்பவம்.

பாதிக்கப்பட்ட அந்த இரண்டு மாணவிகளுக்கும் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஏற்கனவே கடந்தமாதம் தலா ரூ.50,000 உதவித் தொகை வழங்கினார் ஜெயலலிதா.

இந்நிலையில் எம்.ஜி.ஆர். அறக்கட்டளையிலிருந்து தலா ரூ.1 லட்சத்திற்கான காசோலைகளை இன்றுஅம்மாணவிகளிடம் ஜெயலலிதா வழங்கினார். அவர்களுக்காக செலவான மருத்துவச் செலவுகளுக்காக இந்தத்தொகை அளிக்கப்படுகிறது.

மேலும் அந்த இரண்டு மாணவிகளில் ஒருவருக்கு பல் மருத்துவப் படிப்பிற்கும், மற்றொருவருக்கு நர்சிங்படிப்பிலும் இடங்களை ஒதுக்கவும் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+