தென் தமிழகத்தில் கன மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்:
தென் மாவட்டங்களில் தொடர்ந்து ஒரு வாரமாக பெய்து வரும் கன மழையால் அங்கு இயல்பு வாழ்க்கை பெரிதும்பாதிக்கப்பட்டுள்ளது.
அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த மண்டலம் உருவாகியிருப்பதால், கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள தமிழகமாவட்டங்களான கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து ஒரு வாரமாக கன மழை பெய்துவருகிறது.
இந்தத் தொடர் மழையால் அங்கு இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கேரளாவுக்குள் சென்று வரும்ரயில் மற்றும் பஸ் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில், தூத்துக்குடி, மார்த்தாண்டம்,செங்கோட்டை ஆகிய பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.
பல பகுதிகளில் தண்ணீர் கடல் போல சூழ்ந்துள்ளது. இந்த மழை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்றுதெரிகிறது.












Click it and Unblock the Notifications