ஆசிரியர், மாணவர் ஸ்டிரைக்: பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு
சென்னை:
அரசுக் கல்லூரி ஆசியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.இதனால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அரசுக் கல்லூரிகளை பல்கலைக்கழகங்களுடன் சேர்க்கக் கூடாது என்பதை வலியுறுத்தி அரசுக் கல்லூரிஆசியர்களும், மாணவர்களும் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் அக்டோபர் மாதம் நடத்தப்பட வேண்டிய "அரியர்ஸ்" தேர்வுகளை நடத்த இயலாத சூழ்நிலைஏற்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக, பல்கலைக்கழக உத்தரவின்படி பல கல்லூரிகள்தங்களது நோட்டீஸ் போர்டில் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.
இன்று முதல் இந்தத் தேர்வுகள் துவங்குவதாக இருந்தது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் எப்போது நடைபெறும்என்று தெரியவில்லை.
இருப்பினும் அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் வழக்கமான செமஸ்டர் தேர்வுகள் நடைபெறவுள்ளன. அந்த சமயத்தில், அக்டோபர் "அரியர்ஸ்" தேர்வுகளும் சேர்த்து நடத்தப்படும் என்றுதெரிகிறது.