காவிரி: பிரதமரிடம் வலியுறுத்த பாண்டிச்சேரி சட்டசபையில் தீர்மானம்
பாண்டிச்சேரி:
காரைக்கால் பகுதிக்கு உரிய காவிரி நீரை உடனடியாக கர்நாடகம் திறந்துவிடக் கோரி பிரதமர் வாஜ்பாயைநேரில் சந்தித்து வலியுறுத்த பாண்டிச்சேரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பாண்டிச்சேரி சட்டசபை குளிர்காலக் கூட்டத் தொடரின் இரண்டாவது நாள் கூட்டம் இன்று நடந்தது.
அப்போது காவிரி நீர்ப் பிரச்சினை தொடர்பாக அனைத்துக் கட்சிக் குழுவினர் பிரதமரைச் சந்திப்பது தொடர்பானதீர்மானத்தை முதல்வர் ரங்கசாமி கொண்டு வந்தார்.
இந்தத் தீர்மானத்தின் போது பல்வேறு கட்சி உறுப்பினர்கள் பேசினர். அப்போது அதிமுக உறுப்பினர்களுக்கும்ரங்கசாமிக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
சபாநாயகர் ராமச்சந்திரன் உடனடியாகத் தலையிட்டு அமைதிப்படுத்தினார். இறுதியில், தீர்மானம் ஒருமனதாகநிறைவேற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து சட்டசபைக் கூட்டம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
-->












Click it and Unblock the Notifications