For Daily Alerts
Just In
ரெய்ட் நடத்த அனுமதி மறுத்த வேலூர் நீதிபதி
வேலூர்:
முன்னாள் திமுக அமைச்சர் துரைமுருகனின் காட்பாடி வீட்டில் சோதனை நடத்த வேலூர் மாவட்ட நீதிபதி அனுமதிமறுத்துவிட்டார்.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள துரைமுருகனின் வீட்டில் சோதனை நடத்த அனுமதிக்க வேண்டும் என்றுஅம்மாவட்ட நீதிபதியிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் மனு தாக்கல் செய்தனர்.
ஆனால் துரைமுருகனின் காட்பாடி வீட்டில் சோதனை நடத்துவதற்கு அனுமதி கொடுக்க அந்த நீதிபதி மறுத்துவிட்டார்.
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் சென்னை உயர் நீதிமன்றத்தில் அனுமதி வாங்கி காட்பாடி வீட்டிலும்சோதனை நடத்தினர்.
Story first published: Friday, October 18, 2002, 5:30 [IST]