""லஞ்சம் கொடுக்க மாட்டோம்"": மதுரையில் புதிய சங்கம் உதயம்
சென்னை:
லஞ்சம் கொடுக்க மாட்டோம் என்ற முழக்கத்துடன் புதிய சங்கம் ஒன்று மதுரை நகரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
விக்டர் ஜெயராஜ் என்பவரது முயற்சியில் இந்த சங்கம் தொடங்கப்பட்டுள்ளது. சங்கத்தின் தலைவரும் அவர் தான்.அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
அரசு ஊழியர்கள் லஞசம் வாங்கிக் கொண்டு தங்களது கடமையை ஆற்றுகிறார்கள். இது சட்டவிரோதம். லஞ்சம்கொடுப்பதும் குற்றம், வாங்குவதும் குற்றம்.
லஞ்சம் கொடுக்காததால் தங்களது வேலைகள் நடைபெறவில்லை என்று கருதுவோர் எங்களை அணுகலாம்.சம்பந்தப்பட்ட அரசு அலுவலகங்களை அணுகி உண்மை நிலவரத்தை விசாரித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குபோதுமான கால அவகாசம் கொடுப்போம்.
அப்படியும் அந்தக் காரியம் நடக்காவிட்டால் சட்டப்படி நாங்களே நடவடிக்கை எடுப்போம் என்றார் விக்டர்.
மதுரை மாநகராட்சி துணை மேயர் சின்னச்சாமி சங்க தொடக்க விழாவில் கலந்து கொண்டு அதன்உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.