ஓசி ரயில் பயணிகள்: ஒரே நாளில் ரூ.1 லட்சம் அபராதம் வசூல்
சென்னை:
சென்னை புறநகர் மின்சார ரயில்களில் ஓசி பயணம் செய்த 1,250 பேரிடமிருந்து ஒரே நாளில் ரூ.1 லட்சம் வரைஅபராதமாக வசூலிக்கப்பட்டது.
சென்னையில் ஓடும் மின்சார ரயில்களில் கூட்டத்தோடு கூட்டமாகச் செல்வதால், ஆயிரக்கணக்கான பயணிகள்டிக்கெட்டே எடுக்காமல் பயணம் செய்வது வழக்கம்.
இதனால் தெற்கு ரயில்வேக்கு அடிக்கடி நஷ்டம் ஏற்படுவதும் இயல்பான ஒன்று தான்.
இதையடுத்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் திடீர் திடீரென்று சோதனை நடத்தி டிக்கெட் இல்லாமல் பயணம்செய்பவர்களிடமிருந்து அபராதம் வசூலித்த பின் அவர்களை விட்டுவிடுவார்கள்.
அதன்படி நேற்றும் தெற்கு ரயில்வே அதிகாரிகள் வில்லிவாக்கம் மற்றும் பரங்கி மலை ஆகியவற்றுக்கு இடையேஓடிக் கொண்டிருந்த மின்சார ரயில்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்தச் சோதனையில் சுமார் 1,250 பயணிகள் டிக்கெட் எடுக்காமல் ஓசியில் பயணம் செய்து கொண்டிருந்ததுதெரிய வந்தது.
கூட்டம் கூட்டமாக இந்த ஓசி கிராக்கிகளைப் பிடித்து அவர்களிடமிருந்து அபராதம் வசூலித்ததில் நேற்று மட்டும்சுமார் ரூ.1 லட்சம் வரை வசூலானது.