சென்னையில் தொடரும் கன மழை
சென்னை:
சென்னையில் கன மழை தொடர்கிறது. இதனால் நகரின் தாழ்வான பகுதிகள் மழை நீரில் மூழ்கியுள்ளன.
சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் நகரில் இயல்பு வாழ்க்கைபெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. பல சுரங்க நடை பாதைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் அதைப்பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே படு மோசமாக இருந்த சாலைகள் தொடர் மழையால் மேலும் மோசமாகச் சேதமடைந்து விட்டன.
கன மழை காரணமாக சென்னை-சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வரும் இந்திய-மேற்கு இந்தியத் தீவுஅணிகளுக்கிடையிலான கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் (நேற்று) ஆட்டம் தாமதமாகத் தான்தொடங்கியது.
இந்த மழை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது.
இந்த மழையால் சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் மூன்று நாட்களுக்குத் தேவையான தணணீர்சேர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications