சென்னை: சரக்கு விமானத்தில் ஒளிந்து கொண்ட கர்நாடக பெண் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு விமானத்தில் மர்மமான முறையில் ஏறி ஒளிந்திருந்தகர்நாடகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை விமான நிலையத்தின் சரக்குகளை ஏற்றும் பகுதியில் இன்று காலை ஒரு பெண் யாருக்கும் தெரியாமல்நுழைந்தார்.

பின்னர் சரக்கு ஏற்றும் ஊழியர்கள் அணியும் சீருடையை அணிந்து கொண்டு, அவர்களுடன் கூட்டத்தோடுகூட்டமாகச் சென்று சரக்குகள் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்த ஒரு விமானத்தில் ஏறி அங்கு ஒளிந்து கொண்டார்.

அந்த விமானம் துபாயிலிருந்து சென்னை வழியாக ஹைதராபாத்துக்குச் செல்ல வேண்டிய சரக்கு விமானமாகும்.

விமானத்தில் அந்தப் பெண் ஒளிந்து கொள்வதைப் பார்த்து விட்ட பிற ஊழியர்கள் உடனடியாக விமான நிலையப்பாதுகாப்பு அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர்.

பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக விரைந்து வந்து விமானத்தை முற்றுகையிட்டு உள்ளே புகுந்தனர். அங்குமறைவான ஒரு இடத்தில் சத்தம் போடாமல் அமர்ந்திருந்த அந்தப் பெண்ணை வெளியே கொண்டு வந்தனர்.

விசாரணையின் போது அவரது பெயர் மீனா என்றும், கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்என்றும் தெரிய வந்தது.

எதற்காக விமானத்தில் ஏறி ஒளிந்து கொண்டார் என்பது குறித்து அந்தப் பெண்ணிடம் போலீசார் தீவிரமாகவிசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+