மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு கலாமை சந்திக்க வாய்ப்பு
சென்னை:
டெல்லியில் அடுத்த மாதம் 14ம் தேதி நடைபெறவுள்ள குழந்தைகள் தின விழாவை ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாமுடன் சேர்ந்து கொண்டாடும் வாய்ப்பு தமிழகத்தைச் சேர்ந்த 10 மாணவ, மாணவிகளுக்கு கிடைத்துள்ளது.
இது தொடர்பாக ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து தமிழக சமூக நலத்துறை செயலாளர் சி.கே. கரியாலிக்கு கடிதம்வந்துள்ளது.
மாநகராட்சி பள்ளிகள் மற்றும் நலிவடைந்த பிரிவினரிலிருந்து 10 மாணவ, மாணவியரை தேர்வு செய்துடெல்லிக்கு அனுப்புமாறும், அவர்களுடன் இரண்டு ஆசிரியர்கள் உடன் வரலாம் என்றும் கடிதத்தில்கூறப்பட்டுள்ளதாக கரியாலி தெரிவித்தார்.
இந்த மாணவ, மாணவிகள் குழு டெல்லி சென்று வர ஆகும் செலவை மாநில அரசே ஏற்றுக் கொள்ளும் என்றும்கரியாலி கூறினார்.
நவம்பர் 14ம் தேதி டெல்லியில் நடைபெறும் பல்வேறு குழந்தைகள் தின நிகழ்ச்சிகளில் இவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். மேலும், டாக்டர் கலாமுடன் பேட்டி காண்பதற்கும், பேசுவதற்கும் கூட இவர்களுக்கு வாய்ப்புஅளிக்கப்படும்.
நாடு முழுவதிலுமிருந்து இது போன்ற பல்வேறு மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்பட்டு டெல்லி செல்கிறார்கள்என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications